Showing posts with label கடவுள் இருக்கிறாரா?. Show all posts
Showing posts with label கடவுள் இருக்கிறாரா?. Show all posts

Friday, October 3, 2014

கடவுள்

பிரபஞ்சத்தின் மிக முக்கியமான கேள்வியான கடவுள் என்பது என்ன மற்றும் ஏன் கடவுள் இருக்க வேண்டும், கடவுளின் இருப்பினைப் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது? இந்த வகையறையிலான சிந்தனைகளை மையப்படுத்தி சுஜாதா அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக கடவுள் என்ற கட்டுரைத் தொகுப்பினை உயிர்மை பதிப்பகம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியிட்டது.





மொபைல் ப்ரவுசர்களில் இந்த ஆடியோவைக் கேட்க 



மொத்தம் ஐந்து கட்டுரைத் தொகுப்புக்களை உள்ளடக்கிய இந்தக் கட்டுரைத் தொகுப்பில் முறையே,

1.வணக்கம் இறைவா

2. கடவுள் இருக்கிறாரா?

3. என்ன ஆச்சர்யம்!

4. அறிவோம் சிந்திப்போம்.

5. ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து...



ஆகிய ஐந்து கட்டுரைத் தொடர்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

பிரபஞ்சத்தின் ஆச்சர்யமான உயிரைப் பற்றியும், அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் குறித்தும், அணு, அணுக்கரு குறித்தான தெளிவான அறிவியல் விளக்கங்களையும் உள்ளடக்கிய புத்தகமாக கடவுள் இருக்கிறது.

நவீன அறிவியல் கடவுளின் தேவையை எவ்வாறு மறுக்கிறது அல்லது கடவுளின் தேவையை எவ்வாறு இல்லாமல் ஆக்கிவிட்டது என்ற அடிப்படையில் ஆழ்ந்த சிந்தனைகளை வாசகர்களின் மனத்தில் உருவாக்குகிறது. மேலும் அறிவியலையும் மீறிய, அறிவியலால் விளக்கமுடியாத அதிசயங்கள் குறித்தும் என்ன ஆச்சர்யம் பகுதியில் பல்வேறு நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன.

அறிவியல் மற்றும் கடவுள் குறித்த தெளிவான சிந்தனைகளை இந்தக் கட்டுரைத் தொகுப்பு உருவாக்கும் என்பதில் க்வார்க் அளவிலும் சந்தேகமில்லை.

எழுத்தாளார் : சுஜாதா.
பதிப்பகம் : உயிர்மை.
மொத்தப் பக்கங்கள் : 272.
விலை : 200/-